ரீ-மிக்ஸில் சுந்தர் சி., நமிதா
Read Time:1 Minute, 13 Second
பாட்டில்லாமல் படமெடுக்க மாட்டோம் என்று சபதம் செய்திருக்கிறார்கள். இப்போது, ரீ-மிக்ஸ் இல்லாமல் படம் இல்லை என்ற ரேஞ்சுக்கு வந்திருக்கிறது தமிழ் சினிமா.எந்த படத்தை எடுத்தாலும் ஒவ்வொன்றிலும் உண்டு இந்த ரீ-மிக்ஸ். சுந்தர் சி. நடிக்கும் அரைடஜன் படங்களில் ஒன்று ‘பெருமாள்.’ நமிதா, மீனாட்சி என்று இரண்டு ஜோடிகள், படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். இந்தப் படத்திலும் இடம்பெறுகிறது ஒரு ரீ-மிக்ஸ். பிரபலமான ‘ஓ ரசிக சீமானே வா….’ பாடலை பெருமாளுக்காக ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. சென்னை மாயாஜாலில் இந்தப் பாடல்காட்சி படமாக்கப்பட்டது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பதால் இருவரையும் அழைத்துக்கொண்டு மொரீஷியஸ், மலேசியா என்று கிளம்ப இருக்கிறார்கள்.