காதலியை மணக்கிறார் நடிகர் ஜீவா: திருமணம் 21-ந்தேதி நடக்கிறது
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரியின் இளைய மகன் ஜீவா. இவர் “ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக அறிமுகமா னார். தொடர்ந்து `டிஸ்ïம்’, `ராம்’, `ஈ’, `கற்றது தமிழ்’ ஆகிய படங் களில் நடித்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பெற்றார். இதில் ராம், ஈ, கற்றது தமிழ் ஆகிய படங் களில் வித்தியாசமாக நடித்து பாராட்டு பெற்றார். தற்போது ராமேசுவரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஜீவா, மாணவி சுப்ரியாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது பெற்றோர் சம்மதத் தின் பேரில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 21-ந்தேதி நடிகர் ஜீவாவுக்கும், சுப்ரியாவுக்கும் டெல்லியில் திருமணம் நடக் கிறது. டிசம்பர் 1-ந்தேதி சென் னையில் மணமக்களுக்கு வர வேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஜீவா சென்னை தியாகராய நகரில் பஞ்சாப் அசோசியே சன் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தபோது சுப்ரியாவும் அதே வகுப்பில் ஒன்றாக படித்தார்.ஜீவாவின் வீட்டிலேயே இருவரும் ஒன்றாக டிïசன் படித்தனர். அப்போது சுப்ரியாவை ஜீவா குடும்பத் துக்கு பிடித்து போயிற்று. படிப்பு விளையாட்டு என்று நன்றாகவே இருந்தனர். அப் போது இருந்தே அவர்களுக் குள் நட்பு ஏற்பட்டது.
சுப்ரியாவின் பெற்றோர் அமெரிக்காவில் நிïயார்க் நகரில் வசித்தனர். இதனால் சுப்ரியா மேல் படிப்புக்காக கனடா சென்றார். அவரை விமான நிலையம் வரை போய் ஜீவா வழியனுப்பி வந்தார். சுப்ரியாவின் பிரிவு ஜீவாவை வாட்டியது. அதுவே காதலாக மாறியது.
இருவரும் இண்டர்நெட் மூலம் பேசி காதலை வளர்த் துக்கொண்டனர். ஜீவாவும் கனடா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் சினிமா வாய்ப்பு வந்ததால் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அமெரிக்காவில் இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப் பட்டதும் சுப்ரியா குடும்பம் டெல்லிக்கு இடம் பெயர்ந் தது. சுப்ரியாவும் கனடாவில் இருந்து திரும்பி டெல்லியில் பெற்றோருடன் வசித்து வரு கிறார்.