நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!!
Read Time:1 Minute, 1 Second
நாளை கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதுல்கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, உடுகமுல்லை, மிரிஹான, நுகேகொடை, பாகோட, விஜேராம மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அவசிய திருத்த வேலைகள் காணரமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating