ரணிலும் அநுரவும் அண்ணன் தம்பி!!
மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் அவர்களிடையே நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்வாறான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்ட போதும் அந்த உடன்படிக்கைளின் படி அவர்கள் செயற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர்களுக்கிடையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதனை இந்த உடன்படிக்கைகள் எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் அண்ணன் தம்பி போன்று செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating