பொலிஸார் கண்ணில் மண் தூவிய இருவர் கைது!!
Read Time:54 Second
சீதுவ பிரதேசத்தில் பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற சம்பவத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பின் போது காரில் 5 பேர் இருந்துள்ளனர். குறித்த கார் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேகநபர்கள் குறித்து சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating