“இரண்டு படுக்கை’ அறை விமானம் “கலக்ஸ்!”: செக்சுக்கு மட்டும் “நோ”!!
இரண்டு பேர் வசதியாக படுக்கக்கூடிய, 12 அறைகள் கொண்ட விமானத்தை, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ உலகிலேயே, முதன் முறையாக, எந்த விமான நிறுவனமும் துவங்குமுன்,பறக்க விட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜம்போஜெட்,” ஏ 380′ ரக விமானம். இந்த விமானத்தில், முதல் வகுப்பில், 12, “இரண்டு படுக்கை அறை’ வசதிகள் உள்ளன. பறக்கும் விமானத்தில் காதலர்கள், தம்பதிகள் “செக்ஸ் உறவு’ கொள்ளலாம் என்றெல்லாம் ஆரம்பத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்த விமானம் பறக்க விடப்பட்டபோது, பயணிகளிடம், “நீங்கள் இரண்டு படுக்கை அறை வசதியை முழுமையாக அனுபவிக்கலாம். எந்த வெளியார் தொந்தரவும் இருக்காது. ஆனால், “செக்ஸ் உறவு ‘மட்டும் வைக்க வேண்டாம். அதனால் அடுத்தவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படலாம்’ என்று கூறிவிட்டது ஏர்லைன்ஸ். இரண்டு அடுக்கு கொண்ட இந்த விமானம், சிங்கப்பூர் சிட்னி (ஆஸ்திரேலியா) தடத்தில் விடப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்ய, கோடீஸ்வரர்கள், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர். இதில் பயணம் செய்த ஜோடிகள் கூறுகையில்,” இரண்டு படுக்கை அறையை நமக்கு ஏர்லைன்ஸ் தருகிறது. சாப்பாட்டில் இருந்து மது வரை எல்லாம் பரிமாறப்படும். அறையில் உங்களுக்கு விமான பயணிகள் எந்த தொந்தரவும் தர மாட்டார்கள். வீட்டில் உள்ளது போல இருக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை தான்; காதல் வயப்படலாம்… ஆனால், செக்ஸ் உறவு கூடாது’ என்று மட்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது ஏமாற்றம் அளித்தது என்றாலும், இந்த விமான பயணம், புது அனுபவத்தை எங்களுக்கு தந்தது ‘ என்று கூறினர்.பறக்கும் விமானத்தில் , படுக்கை அறைக்குள் “செக்ஸ் உறவு’ மட்டும் வேண்டாம் என்று, ஏர்லைன்ஸ் சொல்ல முக்கிய காரணம் என்ன தெரியுமா? விமானத்தில், சத்தத்தை கட்டுப்படுத்தும் வசதி இல்லை. அதனால், படுக்கை அறையில் இருந்து ஜோடிகளின் முனகல் சத்தம் வெளியே கேட்டால், மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலை தரலாம் என்பதுதான்.