புலிகளை தாக்குவது கஷ்டமல்ல பொது மக்கள் குறித்தே சிந்திக்கிறோம் – பெர்னாண்டோ புள்ளே
Read Time:1 Minute, 18 Second
புலிகள் எம்மைத் தாக்கும் போது நாங்கள் ஏன் பதில் தாக்குதல் நடத்துவதில்லையென்று சிலர் கேட்கின்றனர். அவ்வாறு நாங்கள் தாக்கினால் அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாக உயிரிழக்க நேரிடும். என்பதால் சிந்திக்கின்றோம் என்று வர்த்தக வாணிப அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எம் பொறுமையை அவர்கள் அளவு கடந்து சோதிக்கின்றனர். வலியவந்து சண்டைக்கு எம்மை இழுக்கிறார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடிக்கின்றோம். நாங்கள் பொறுப்பு மிக்க அரசாங்கத்தை ஏற்றுள்ளவர்கள் நாங்கள் மனம் வைத்தால் இரண்டு மூன்று தினங்களில் புலிகளின் அட்காசத்தை ஒழித்துவிடமுடியும். அந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.