தேர்தலுக்காக ஆளுக்கு இரண்டரை மில். ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது இந்தமுறை தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமையின் காரணமாகவே என்று முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி தீர்வுமுறையை அவர்கள் முன்வைத்துள்ளதன் மூலம் அந்தக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஏதோ உடன்பாடிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பது தௌிவாகிறது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தமுறை தேர்தலில் போட்டியடும் ஐக்கிய தேசிய கட்சியின், முன்னணி வேட்பாளர்களுக்கு இரண்டரை மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்தாகவும், அந்த பணம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதனூடாக பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஐதேக மற்றும் ஐமசுகூ ஆகிய கட்சிகளின் விளம்பரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இவை தெளிவாகிறது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க ரெிவித்தார்.
Average Rating