மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்!!
Read Time:1 Minute, 14 Second
பொகவந்தலாவ – கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று (09) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இவர்கள் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களை நாளை (11) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேஷி தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating