மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை!!
Read Time:59 Second
மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் சா அலாம் நகரிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றிற்குள் குறித்த இலங்கையர் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலைச் சம்பவம் தொடர்பில் 07 சந்தேக நபர்களை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கொலை செய்யப்பட்டுள்ள இலங்கையர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Average Rating