சஜின் வாஸ் மீண்டும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிராக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்டுவதனால் அவரை தெடர்ந்து விளக்கமறியலில் வைக்க பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு அமைய நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து பார்த்த கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே சந்தேக நபரை எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக எமது அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Average Rating