தேர்தல் சட்டங்களை மீறிய 700 பேர் கைது!
Read Time:1 Minute, 5 Second
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட 244 சுற்றிவளைப்பில் தேர்தல் சட்டங்களை மீறிய 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய சந்தேகத்தின் பேரில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 307 முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்திற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating