17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!
Read Time:56 Second
நாளை மறுதினம் 17ம் திகதி நாட்டில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்.
வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.ஸீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Average Rating