இம்முறை கட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் பற்றிய விபரம்!!

Read Time:1 Minute, 29 Second

1609559880Untitled-1இம்முறை பொதுத் தேர்தலுக்கான மேலதிக ஆசனங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி 63 ஆசனங்களை நாடளாவிய ரீதியில் சுவீகரித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலதிக ஆசனங்களாக 13ம், 83 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 12 மேலதிக ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை 14 ஆசனங்களை வெற்றி கொண்டு மேலதிகமான இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

நான்கு ஆசனங்களை பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி மேலதிகமான இரண்டு ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 106 பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் 95 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் 16 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆறு உறுப்பினர்களும் ஈபிடிபி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய அரசாங்கத்திற்கு த.தே.கூ பங்களிப்பு வழங்குமா?
Next post அமைதியான தேர்தல் இடம்பெற்றுள்ளது; தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்!!