கூட்டமைப்பின் புதிய செயலாளராக விஸ்வ வர்ணபால!!
Read Time:1 Minute, 7 Second
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபால பொறுப்பேற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு, கடந்த ஆகஸ்ட் 14ம் திகதி, இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கூட்டமைப்பின் பதில் செயலாளராக விஸ்வ வர்ணபால ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் சுசில் பிரேமஜயந்த தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று விஸ்வ வர்ணபால கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
Average Rating