லொறி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!!
Read Time:1 Minute, 2 Second
தம்புள்ளை கெக்கிராவ பிரதாண வீதியின் மிரிஸ்ஹோனியாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 07 பெண்களும் அடங்குகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating