கம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்!!
Read Time:58 Second
பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சி சார்பில் சந்தரசிறி கஜதீர இந்த முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அதன்படி அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது சுயாதீனமாக செயற்படுவார் என்று டீயூ குணசேகர தெரிவித்துள்ளார்.
Average Rating