கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
Read Time:43 Second
ஓப்பநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
உடவல, பல்லேகம பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating