மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்ய மக்கள் எதிர்ப்பு!!
Read Time:1 Minute, 21 Second
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று நெல் மூடைகளை ஏற்றிய முதலாவது தொகுதி லொறி மத்தல விமான நிலையத்திற்குச் சென்றது.
முதலாவது லொறி விமான நிலையத்திற்கு உள்ளே சென்றபோதும் ஏனைய லொறிகளை உள்ளே செல்ல விடாது பிரதேசவாசிகள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
மத்தல விமான நிலையத்தில் பயன்படுத்தப்படாத பகுதிகளிலேயே நெல் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முழு விமான நிலையத்தையும் நெல் களஞ்சியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating