கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!
Read Time:1 Minute, 21 Second
கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இம்மாதம் 08ம் திகதி இரவு 09 மணி முதல் அடுத்த நாள் 09ம் திகதி காலை 06 மணி வரையான 09 மணிநேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி கலுஅக்கல, ஹங்வெல்லை, கலகெதர, பாதுக்கை, கொடகம, பனாகொடை, ஹோமாகம, பன்னிப்பிட்டிய மற்றும் பெலவத்தை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர குறித்த காலப்பகுதியில் கொழும்பு 08, 09 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Average Rating