பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது!!
Read Time:1 Minute, 13 Second
பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளை வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வத்தளை நகரசபையின் முன்னாள் உப தலைவரை விடுதலை செய்வது தொடர்பில் உதவிகளை பெறும் நோக்கில் பணத்தை வழங்க முற்பட்ட போதே இவர்கள் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதானவர்கள் முன்னாள் நகரசபைத் தலைவரின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் இலஞ்சம் கொடுக்க முற்பட்டது சபுகஸ்கந்தை பொலிஸ் பிரதான பரிசோதகராக செயற்பட்ட பி.ஜீ.எஸ்.ஆர்.சஞ்ஜீவவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating