சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு!!
Read Time:1 Minute, 0 Second
சட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
அதன்படி, விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Average Rating