உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!
Read Time:1 Minute, 19 Second
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையின் முதலாம் கட்டம் இன்று முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக 7600 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 23 பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் 08 பாடசாலைகள் முழுமையாகவும் 17 பாடசாலைகள் பகுதியளவிலும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 17 மாவட்டங்களின் 20 நகரங்களில் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதலாம் கட்டம் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 27ம் திகதி முதல் ஒக்டோபர் 08ம் திகதி வரை இரண்டாம் கட்ட திருத்தும் பணிகள் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Average Rating