துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!
Read Time:1 Minute, 7 Second
கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும், எவ்வாறாயினும் உயிரிழந்த பெண்ணின் கணவன் முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating