நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!
Read Time:48 Second
திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இரவு தூங்கிய 5 வயதுடைய சிறுமியை காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Average Rating