சிபா உடன்படிக்கை பொய்யானது – அரசாங்கம் மறுப்பு!!
Read Time:1 Minute, 5 Second
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடுவதோ அல்லது அது சம்பந்தமான கலந்துரையாடலோ இடம்பெறமாட்டாது என் அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட இருப்பதாக பலவித பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது இழக்கப்பட்ட அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்தப் பொய்ப்பிரச்சாரம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating