குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் பாதிப்பு!!
Read Time:1 Minute, 8 Second
நுவரெலியா – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் நேற்று மாலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் முனியப்பன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே குளவிகள் இவ்வாறு தாக்கியுள்ளன.
இதேவேளை நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிங்போனி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Average Rating