பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!!

Read Time:1 Minute, 44 Second

6e5953eb-677f-40c5-bb2b-3ee6cafdc606_S_secvpfபாலியல் பலாத்கார சம்பவங்களின் தாயகமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம்தேதி பி.கே.சிங் என்ற கொடூரனால் பைஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். தற்போது 18 வயதாகும் அந்த பெண், இன்று மதியம் தனது சகோதரனுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது வாழ்க்கையை சீரழித்த பி.கே.சிங் ஒரு தனியார் கல்லூரியின் மேனேஜராக பணிபுரிகிறான். உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இன்னும் இரண்டு நாட்களில் கோரட்டில் ஆஜராக இருந்த நிலையில், அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கும் பி.கே சிங்குக்கும் தொடர்புள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சோகத்துடன் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைத்தந்தம் கடத்திய நால்வருக்கு விளக்கமறியல்!!
Next post உடுமலை பகுதியில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது!!