கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி!!
Read Time:55 Second
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள ஜமீன்தேவர் குளத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது36), கட்டிட தொழிலாளி. இவர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள ஒரு கட்டிடம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating