கோட்டாபயவிடம் இன்றும் விசாரணை!!
Read Time:58 Second
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல், மோசடி, அரச சொத்து, வரப்பிரசாதம் மற்றும் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்கு இன்று காலை 8.30 அளவில் அவர் அழைக்கப்பட்டார்.
ரக்னா லங்கா ஊழியர்கள் மற்றும் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்தவே கோட்டாபய இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினமும் கோட்டாபயவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating