டெல்லியில் காரில் கடத்தப்பட்டு பெண் கற்பழிப்பு: 5 பேர் கைது!!
டெல்லியில், நேற்றுமுன்தினம் அதிகாலையில், 37 வயதான ஒரு பெண், காரில் கடத்திச் செல்லப்பட்டு, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர், கணவரைப் பிரிந்து, மேற்கு டெல்லியில் சாகர்பூர் என்ற இடத்தில் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். வீடு அருகே உள்ள மார்க்கெட்டுக்கு அவர் சென்றபோது, ஒரு கால் டாக்சி வந்து நின்றது. அதன் பின்இருக்கையில் இருந்த 2 பேர், அப்பெண் மீது பாய்ந்து அவரை காருக்குள் இழுத்துப் போட்டனர். அதன் டிரைவர், அவருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்.
3 பேரும் அவரை காரில் கடத்திச் சென்றனர். 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பஞ்சர் கடைக்கு கார் சென்றது. அங்கு ஏற்கனவே 2 பேர் காத்திருந்தனர். அவர்களும், காரில் கடத்திய 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டாக கற்பழித்தனர். பின்னர், போலீசுக்கு செல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி அப்பெண், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கார் டிரைவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating