போலீசில் சக தொழிலாளிகள் புகார் சிங்கப்பூரில் வேலைபார்த்த தமிழக வாலிபர் கொலை?

Read Time:3 Minute, 9 Second

சிங்கப்பூரில் வேலை பார்த்த தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (20). இவர் ஜனவரி 27ம் தேதி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றார். அங்கு பான்சூன்லி என்ற கம்பெனி சார்பில் ஜூராம் என்ற இடத்தில் கப்பல் துறைமுகத்தில் லேபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு ராஜ்குமார் பணி புரிந்த இடம் அருகே கம்பெனியின் உரிமையாளர் தீபாவளிக்காக ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் மதுபான பார்ட்டி வைத்துள்ளார். இதில் ராஜ்குமார் மற்றும் அவருடன் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த 19 பேர் கலந்து கொண்டு மது அருந்தினர். பின்பு ராஜ்குமாரை தவிர மற்ற அனைவரும் வெளியே சென்று விட்டனர். நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ராஜ்குமார் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில், ராஜ்குமார் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி சிங்கப்பூர் போலீசார் அவசர, அவரசமாக ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது, ராஜ்குமாருடன் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராஜ்குமார் மாடியில் இருந்து விழுந்தால் உடலில் காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவரது உடலில் அதிகளவில் காயம் இல்லை என்பதால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை தமிழகத்திற்கு அனுப்ப கூடாது. மீண்டும் ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மீண்டும் ராஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்ப. ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு இறந்ததாக கூறி அவருடன் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த 124 பேர் பணிக்கு செல்லாமல் இருக்கின்றனர்.

ராஜ்குமார் கொலை செய்யப்பட்டுதான் இறந்தார் என, அவருடன் பணிபுரிந்தவர்கள் சிங்கர்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கணவருடன் ஹைதராபாத் திரும்பினார் சிரஞ்சீவி மகள்
Next post செல்போனில் பேசியபோது மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.