கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
Read Time:1 Minute, 4 Second
கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் மலையடிவாரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு 2 மகன்கள், 3 மகள் உள்ளனர்.
கணவரை இழந்த கிருஷ்ணவேணி கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
மூத்த மகள் புவனேஸ்வரி வல்லாஞ்சேரியில் உள்ள ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 14–ந்தேதி வேலைக்கு சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணவேணி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating