சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்த யோசனையை முன்வைக்க குழு!!
Read Time:1 Minute, 10 Second
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் தொடர்பிலான யோசனையை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் திலக் மாரபன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, சந்திரானி பண்டார, விஜேயகலா மகேஸ்வரன், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை ஆகியோரும் குறித்த குழுவில் அடங்குகின்றனர்.
Average Rating