கொள்ளுப்பிட்டியில் ஆஸி. பிரஜை சடலமாக மீட்பு!!
கொள்ளுப்பிடிய – ஆர்.ஏ.த.மெல் மாவத்தை பகுதியின் ஹோட்டல் அறையொன்றில் இருந்து வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 11.00 மணியளவில் வௌியேறுவதாக இருந்த இவர் நண்பகல் ஆகியும் வௌியேறாத நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது 27 வயதான குறித்த அவுஸ்திரேலியப் பிரஜை படுக்கையில் சுயநினைவின்றி வீழ்ந்து கிடந்துள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிப்பட்டுள்ளதோடு விசாரணைகளில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் உயிரிழந்த இடத்தில் இருந்து போதைப் பொருள் மற்றும் தூக்க மாத்திரைகள் அடங்கிய பக்கற் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் அவுஸ்திரேலியப் பிரஜை எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வௌியாகவில்லை.
கொள்ளுப்பிடிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating