செங்குன்றம் அருகே தேர்வு எழுத பயந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

Read Time:1 Minute, 24 Second

259eb86d-173f-4b48-8d2d-1c41e9edd93b_S_secvpfசெங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர், மருதுபாண்டி நகர் 12–வது தெருவில் வசித்து வருபவர் காமாட்சி. இவரது மகள் திவ்யா (வயது 16). அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

10–ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற திவ்யா, தற்போது ஆங்கில மொழியில் படிக்க சிரமம் அடைந்தார்.

இந்த நிலையில் பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. திவ்யா இன்று சமூக அறிவியல் தேர்வு எழுத இருந்தார். கஷ்டப்பட்டு தாய் படிக்க வைத்து வரும் நிலையில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய் விடுமோ என்று அவர் வருத்தம் அடைந்தார்.

இதனால் தேர்வு எழுத பயந்த திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் காமாட்சி சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணல் அள்ளியதை தட்டிக்கேட்டதால் வாலிபரை தாக்கிய 10 பேர் கைது!!
Next post அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர!!