பெண் தீக்குளித்து தற்கொலை
Read Time:1 Minute, 3 Second
குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ஜான் அன்பு செல்வம் (வயது 30). இவரது மனைவி ஜெயந்தி (வயது 24). ஜான் அன்பு செல்வம் துணி வியாபாரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தீபாவளி சீசனில் வியாபாரம் சரிவர நடக்காததால் கணவன்மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த ஜெயந்தி நேற்றிரவு தீக்குளித்தார். படுகாயம் அடைந்த ஜெயந்தியை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயந்தி இறந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.