யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதான திஸாநாயக மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட ஒன்பது பேர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஏழ்வர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி இவர்களில் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 75,000 ரூபா அபராதமும் ஏனைய அறுவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து வவுனியா நீதவான் வீ.ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை மற்றைய இருவரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதையல் தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த யூ.கே.திஸாநாயக கோட்டை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அத்துடன் வழக்கை வவுனியா நீதிமன்றத்தில் நடத்தவும் உத்தரவிட்டார். பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 30ம் திகதி வரை (இன்று வரை) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating