வெல்லாவௌி வீடொன்றில் 29 பவுன் தங்க நகைகள் கொள்ளை..!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டையில் உள்ள ஆலய வண்ணக்கர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 29 பவுன் தங்க நகைகள் நேற்று புதன்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை வீட்டின் உரிமையாளரான ஆலய வண்ணக்கர் வீட்டில் இருந்து வெளியில் சென்றதை பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் வீட்டினுள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ள நகைகள், குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சொந்தமான நகைகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 225 கிராம் எடைகொண்ட 12 இலட்சத்து 25,000 ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஸ்தலத்துக்கு சென்றுள்ள தடவியல் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating