மல்லாவியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 38 பேர் காயம்..!!
Read Time:1 Minute, 12 Second
மல்லாவி, ஒட்டறுத்தகுளம் பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 38 பேர் காயமடைந்துள்ளனர்.
புதன் கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, அறியல் நகர் பகதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை ஏற்றிக் கொண்டு மல்லாவி நோக்கிப் பயணித்த பஸ்சும் மல்லாவியில் இருந்து நெட்டாங்கண்டல் நோக்கிப் பயணித்த பஸ்சும் ஒட்டறுத்தகுளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் இதில் பயணித்த 38 பேர் காயமடைந்து மல்லாவி மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating