சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 12 Second
சிறுப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்சுவேலி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த பொன்னம்மா நல்லம்மா (வயது 95) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிள் செலுத்தி வந்த கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி சீவரத்தினம் (வயது 71) என்பவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating