துப்பாக்கிச் சூட்டில் வேட்டைக்காரன் பலி..!!
Read Time:1 Minute, 5 Second
யால தேசி வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வேட்டடைக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஏனைய இரண்டு வேட்டைக்காரர்களும் துப்பாக்கியுடன் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் சடலம், கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிர்காமம் வெடிஹிட்டிக்கந்த பிரதேசத்தைச் சேரந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Average Rating