பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள், பணம் திருட்டு! யாழ். சுன்னாகத்தில் துணிகரம்…!!
Read Time:1 Minute, 21 Second
பட்டப்பகல் வேளையில வீட்டின் முன்கதவை உடைத்து நுழைந்த திருடர்கள் துணிகரமான முறையில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்தையும்
திருடிச் சென்றுள்ளார்கள்.
சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய வீதியில் தனிமையாக வசித்து வரும் இளம் பெண் ஒருவரின் வீட்டில் இந்த துண்கரமான திருட்டு நடை பெற்றுள்ளமை அந்தப் பகுதயில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பெண் தையல் வேலைக்கு செல்வது வழமையாகும்.இதனை அவதானித்த திருடர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட திருட்டு சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் சோக்கோ பொலிசார் கைவிரல் அடையாளங்களை பெற்றுச் சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating