எவன்கார்ட் குறித்து விசாரணைக்கு பணிப்புரை ..!!
Read Time:1 Minute, 12 Second
காலி துறைமுக கடற்பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்த எவன்கார்ட் கப்பல் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட த்தில் வைத்து ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை விடுத்த தாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்லார்.
குறித்த கப்பலில் ஆயுதங்கள் இருக்கின்றமை ஆரம்ப கட்ட விசாரணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
கப்பல் மாலுமிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சில குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், கப்பல் கைப்பற்றப்பட்டபோது உக்ரேனியர் ஒருவரே அதற்குப் பொறுப்பாக இருந்ததாகவும், ஆனால் ஆவணங்களில் இலங்கையர் ஒருவரே கப்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating