நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை…!!

Read Time:1 Minute, 59 Second

a86b7044-5384-4d2d-a293-e79fe2dee9f6_S_secvpfஉத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மீரட்டின் டி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு நிதின் சேத்தி, சாத்தே மற்றும் அமர் ஆகியோர் நேற்று இரவு சாப்பிடச் சென்றனர். அப்போது, பில் தொகையில் 40 ரூபாய் வித்தியாசம் இருந்ததை தட்டிக்கேட்டதால் அவர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, உணவக ஊழியர்களில் ஒருவர் கனமான இரும்பு பாத்திரத்தால் நிதினின் தலையில் தாக்க, ரத்தம் கொட்டியது. இதனால் பதறிப்போன சாட்டே மற்றும் அமர் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நிதின் தனது சகோதரர் சச்சினுக்கு தகவல் தெரிவித்தார். அவர் தன்னுடன் மோனு, ராகுல் மற்றும் சுமித் ஆகியோரை உதவிக்கு அழைத்துக்கொண்டு உணவகத்துக்கு வந்து தட்டிக்கேட்க, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, உணவக ஊழியர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் மோனு சம்பவ இடத்திலேயே இறந்தார். ராகுல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவகத்தின் அதிகாரி ரஜத் மற்றும் 3 ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே புகைப்படத்தால் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய ஜோடி…!!
Next post ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்…!!