சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தம்பியும் தூக்கிட்டுத் தற்கொலை? – மரணம் தொடர்பில் சந்தேகத்தையடுத்து விசாரணைகள்..!!
Read Time:1 Minute, 1 Second
13 வயதான சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்டும் ஒன்பது வயது சிறுவனின் சடலமொன்றை நேற்று 11 ஆம் திகதி காலை அங்குருவாதோட்ட பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
புடவைத் துண்டொன்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சிறுவனின் சடலத்தை நேற்றுக் காலையே வீட்டார் கண்டுள்ளனர்.
இச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டானா? இல்லை யாராவது இச்சிறுவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது குறித்து அங்குருவாதோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating