தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…!!

Read Time:5 Minute, 40 Second

2b2172bd-559c-4bc1-b6f7-badb5a0e811e_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாலிவாரம் அருகே காடுமுச்சந்திரம் என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் பேளாழப்பா (வயது 60). விவசாயி. இவரது முதல் மனைவி கொத்துரம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் பேளாழப்பா அதே ஊரை சேர்ந்த மாதேவம்மாள் (வயது 40) என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுமோ என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்த நிலையில், மாதேவம்மாளுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சீபரப்பா (வயது 55) என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சீபரப்பா திருமணம் ஆனவர். அவரது மகன் மற்றும் மகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

இதற்கிடையே சீபரப்பாவுக்கும் மாதேவம்மாளுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு விஷயம் கணவர் பேளாழப்பாவுக்கு தெரிய வந்தது. இதனை அவர் பலமுறை கண்டித்துள்ளார். எனினும் மனைவி கேட்கவில்லை. நேற்றும் இது தொடர்பாக கணவன்– மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சீபரப்பா, இருவரும் சண்டை போடுவதை கண்டார். உடனே அங்கு சென்று அந்த சண்டையை விலக்கி விட முயன்றார். ஏன்? சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். சண்டை போடாமல் சமாதானமாக வாழ வேண்டியது தானே என்றும் கூறியுள்ளார்.

இதனால் பேளாழப்பாவுக்கும், சீரப்பாவுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இது கணவன்– மனைவி சண்டை, நீ வந்து எப்படி கேட்கலாம். சண்டையை விலக்கி விட உனக்கு உரிமை இல்லை என்று பேளாழப்பா கூறி சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து சீபரப்பா அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

அவர் வீட்டுக்கு சென்ற பிறகும் கணவன்–மனைவிக்கும் இடையேயான சண்டை நீடித்து கொண்டே இருந்துள்ளது. மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து, உதைத்துள்ளார். அதன் பிறகு பேளாழப்பா தூங்கச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து கள்ளக்காதலன் சீபரப்பாவை மாதேவம்மாள் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் மாதேவம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வருகிறார் என்று கருதிய மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த திட்டத்தையும் கள்ளக்காதலிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த பெரிய கடப்பாரையை தூக்கிக் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த பேளாழப்பாவின் கழுத்தில் குத்தினர். மேலும், காது, கால், தொடை ஆகிய பகுதிகளிலும் குத்தினர். இதனால் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

வலியால் அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கள்ளக்காதலன் அங்கிருந்து ஓடி விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாயி பேளாழப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அமிர்பாஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கொலையுண்ட பேளாழப்பா உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, மனைவி மாதேவம்மாள், கள்ளக்காதலன் சீபரப்பா ஆகிய இருவரையும் பிடித்து போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி கடப்பாரையால் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!
Next post இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!