தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!
இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று சுமத்ராவில் மாயமாகி உள்ளது.
சுமத்ராவில் 5 பேருடன் சென்ற அந்த ஹெலிகொப்டர் ஒற்றை என்ஜின் கொண்ட யூரோகாப்டர் ஈ.சி.-130 என்ற வகையை சேர்ந்த்தாகும்.
PT Penerbangan Angkasa நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹெலிகொப்டர் மதியம் 12.20 மணியளவில் சுமத்ரா சமோசர் தீவிலிருந்து மெடான் சிட்டி குவாலாநாமு விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.
பறக்க துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின்னர் திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை ஹெலிகொப்டர் இழந்துள்ளது.
அந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி மற்றும் ஒரு என்ஜினியருடன், 3 பயணிகளும் இருந்துள்ளனர்.
குவாலாநாமு விமான நிலையத்தில் தரையிறங்க 10 நிமிடங்களே இருந்த நிலையில் ஹெலிகொப்டர் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகொப்டரை தேடும் முயற்சியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியாவில் தொடர்ந்து விமான விபத்துகள் நிகழ்ந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating