எலும்புக்கூடு ஆடையுடன் தோன்றிய ஆசிரியை: ஆச்சரியத்துடன் கவனித்த மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!
நெதர்லாந்தில் உயிரியல் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு வினோதமான முறையில் பாடம் எடுத்து அசத்தியுள்ளார்.
நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.
அது என்னவென்றால், இவர் வசிக்கும் பகுதியில் எலும்புக்கூடுகள் போன்று வடிவமைக்கப்பட்ட பேண்ட்களை பெண்கள் அணிந்து செல்வதை கவனித்துள்ளார்.
அதன்படி அந்த ஆடையை அணிந்து வந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்தால், அவர்களும் சுலபமாக புரிந்துகொள்வார்கள் என்பதை உணர்ந்துகொண்டு, இதற்காக தலைமை ஆசிரியையிடம் அனுமதி கோரியுள்ளார்.
தலைமை ஆசிரியரின் அனுமதி கிடைத்துவிடவே, ஒரு நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், திடீரென மேஜை மேல் ஏறிநின்று கொண்டு ஆடைகளை களைந்துள்ளார்.
அந்த ஆடைக்குள், எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்த பாகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகளை டெபி அணிந்திருந்தை பார்த்து மாணவர்கள் ஆச்சரியத்தில் கவனித்தனர்.
இதன் பின்னர் தான் அணிந்திருந்த ஆடைகளில் வடிவமைக்கப்பட்ட பாகங்களை ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு டெபி விளக்கியுள்ளார்.
Average Rating