ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்
Read Time:45 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு மாநாட்டு கூடத்தில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஈராக் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அகமது அல்-ஹத்ஜியா, அவரது 21 மெய்க்காப்பாளர்கள், 30 தடகள வீரர்கள் ஆகியோரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் அரசாங்க கார் போன்று தோற்றம் அளித்த கார்களில் வந்தனர். கடத்தப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.